News November 7, 2025
அரசியல் நிகழ்வுகளுக்கு 3 மணி நேரம் மட்டுமே அனுமதி

<<18215650>>அரசியல் பொதுக்கூட்டங்களுக்கான<<>> வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்கியுள்ளது. அதன்படி, பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு அதிகபட்சம் 2 மணி நேரம் மட்டுமே பொதுமக்கள் காத்திருக்க அனுமதி. அதேபோல், அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளுக்கு 3 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகள், இது தொடர்பாக நடந்து வரும் வழக்கு விசாரணையின் போது சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ளன.
Similar News
News February 19, 2026
தேமுதிகவுக்கு 10+1 .. அப்போ கூட்டணி கட்சிகளின் நிலை?

அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையாமல் போனதற்கு ராஜ்யசபா சீட் முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், தற்போது திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவிற்கு 10 MLA + 1 RS சீட்கள் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேலை தேமுதிகவுக்கு 10+1 திமுக வழங்குமேயானால், பல ஆண்டுகளாக திமுகவுடன் பயணிக்கும் விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் அதை எப்படி எடுத்து கொள்ளும் என கேள்வி எழுந்துள்ளது.
News February 19, 2026
மகளிர் வங்கிக் கணக்கில் ₹4000 .. ஹேப்பி நியூஸ்

கோடைகால சிறப்பு நிதியாக இனி ஆண்டுதோறும் மகளிருக்கு <<19184435>>₹2,000<<>> வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 3 மாத மகளிர் உரிமை தொகையுடன், கோடைகால சிறப்பு நிதியும் சேர்த்து, மகளிரின் வங்கி கணக்கில் ₹5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் மே மாதத்தில் மட்டும் தேர்தல் வாக்குறுதியின்படி உயர்த்தப்படவுள்ள மகளிர் உரிமை தொகை ₹2,000, கோடைகால சிறப்பு நிதி ₹2,000 என மொத்தம் ₹4,000 வழங்கப்படும்.
News February 19, 2026
காங்கிரஸை சாடிய வைகோ

மதிமுக தனி சின்னத்தில் தான் போட்டியிடும் என வைகோ திட்டவட்டமாக கூறியுள்ளார். இண்டியா கூட்டணிக்கு ஸ்டாலின் தான் தலைமை ஏற்க வேண்டுமென பிற மாநிலங்களில் இருந்து குரல்கள் வருவது திமுகவுக்கு பெருமை; இதனால் கூட்டணி கட்சிகளும் பெருமையடைகிறோம் என பேசியுள்ளார். மேலும், காங்கிரஸ்காரர்கள் ஒரே நேரத்தில் 9 குரல் கொடுப்பார்கள், அவற்றுக்கெல்லாம் பதில் கூறமுடியாது என தெரிவித்துள்ளார்.


