News March 14, 2026

அரசியல் துரோகிக்கு பாடம் புகட்டப்படும்: OPS

image

அந்த நபர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் கிடையாது என்று EPS-யின் பெயரை குறிப்பிடாமல் OPS விமர்சித்துள்ளார். முதலமைச்சர் என்ற நிலைக்கு கொண்டு நிறுத்தியவரை (சசிகலா), அந்த நபர் (EPS) எந்த அளவிற்கு மரியாதை குறைவாக நடத்தினார் என்பதை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்; அரசியலில் மிகப்பெரிய துரோகியான அந்த நபருக்கு தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் எனவும் தெரிவித்தார்.

Similar News

News April 1, 2026

மூன்றே மாதத்தில் கஞ்சா ஒழிக்கப்படும்: EPS

image

TN-ல் எங்கு பார்த்தாலும் கஞ்சா, போதைப் பொருள் புழக்கமாக உள்ளது என EPS குற்றஞ்சாட்டியுள்ளார். சாக்லேட், திரவ வடிவத்தில் கிடைக்கும் கஞ்சாவை பயன்படுத்தி பள்ளி & கல்லூரி மாணவர்கள் வாழ்க்கை சீரழிந்துவிட்டதாக குறிப்பிட்ட EPS, இதற்கு காரணமான திமுக அரசு ஆட்சியில் தொடர வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பினார். மேலும், அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதங்களில் கஞ்சா முற்றிலும் ஒழிக்கப்படும் என்றார். <<-se>>#TNElection2026<<>>

News April 1, 2026

மேடையில் கண் கலங்கினார் ஆதவ் அர்ஜூனா

image

சாதியின் காரணமாக தனது அம்மா தற்கொலை செய்துகொண்டதாக ஆதவ் அர்ஜூனா வேதனை தெரிவித்தார். கட்டாயத்தின் பேரில் சாதிய கட்டமைப்புக்குள் திருமணம் செய்து அவர் வாழ்ந்ததாகவும், அதன்பிறகு கடன் சுமை தாங்க முடியாமல் தன் கண் முன்னே உயிரைவிட்டதாகவும் ஆதவ் பிரசார மேடையில் கண் கலங்கினார். பிற்காலத்தில் அம்பேத்கர், பெரியாரை படித்து ஏன் சாதியை ஒழிக்கவேண்டும் என புரிந்துகொண்டு அரசியல் பாதையை தேர்வு செய்ததாக கூறினார்.

News April 1, 2026

இன்று பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

பங்குனி உத்திர விழாவையொட்டி இன்று தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இங்கெல்லாம் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படாது. அதேபோல், நார்த்தாமலை தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்.6-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். அதேநேரம், முழு ஆண்டுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது.

error: Content is protected !!