News November 6, 2025

அரக்கோணம்: GH-ல் திருட்டு!

image

அரக்கோணம் அரசு பொது மருத்துவமனையில் உள் நோயாளியாக இருப்பவர்களிடம் இரவு நேரங்களில் செல்போன் திருடு போனது .இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தொடர்ந்து புகார் சென்றது. இந்நிலையில் நேற்று இரவு நோயாளி ஒருவரிடம் செல்போன் திருடியவர் கையும் களவுமாக பிடிபட்டார். இன்று நவம்பர் 5ம் தேதி டவுன் போலீசார் விசாரித்து வழக்குப்பதிந்து ஆத்தூரை சேர்ந்த மாரியப்பன் (45) என்பவரை கைது செய்தனர்.

Similar News

News February 15, 2026

ராணிப்பேட்டை: SBI வங்கியில் வேலை வேண்டுமா..? APPLY NOW!

image

ராணிப்பேட்டை மாவட்ட பட்டதாரிகளே! SBI வங்கியில் ‘Circle Based Officer( CBO)’ பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதில் விண்ணப்பிக்க பிப்.25-ம் தேதி கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. SHARE பண்ணுங்க!

News February 15, 2026

ராணிப்பேட்டை: பெண் அதிரடி கைது

image

பெரம்பூரைச் சேர்ந்தவர் சுகுமாறன். இவர், இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி, சாவியை வீட்டின் மறைவான இடத்தில் வைத்து விட்டு வெளியே சென்றார். இதை நோட்டமிட்ட மர்மப் பெண் ஒருவர், வீட்டில் இருந்த பணம், வெள்ளிப் பொருட்களை எடுத்துச் சென்றார். விசாரணையில், அவர் ராணிப்பேட்டையைச் சேர்ந்த இந்துமதி(35) என்பதும் ஏற்கனவே பல திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் எனத் தெரிய வந்ததும் போலீசார் கைது செய்தனர்.

News February 15, 2026

ராணிப்பேட்டையில் மான் சடலம்!

image

மாங்காடு கிராமத்தில் உள்ள குளத்தில் புள்ளிமான் ஒன்று நேற்று (பிப்.14) தேதி இறந்து கிடந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் வனத்துறை, கால்நடைத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கால்நடைத்துறையினர் அங்கே வந்து பிரேத பரிசோதனை செய்தனர். மேலும், மான் எப்படி இறந்தது என போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!