News March 21, 2025
அரக்கோணம் வழியாக சென்ற ரயில்கள் தாமதம்

அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் இருப்புப் பாதையில் புளியமங்கலம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் இன்று(மார்.21) மாலை திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் டெக்னிகல் பிரிவு ஊழியர்கள் அதிகாரிகள் அங்கு சென்று சிக்னல் கோளாறு சரி செய்தனர். இதனால் அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் மின்சார ரயில்கள் 30 நிமிடம் கால தாமதமாக சென்றது.
Similar News
News August 20, 2025
FLASH: ராணிப்பேட்டையில் இபிஎஸ் சொன்ன குட் நியூஸ்!

ராணிப்பேட்டை, சோளிங்கர் பகுதியில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரையை இன்று (ஆக.20) EPS மேற்கொண்டுள்ளார். இதில் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டத்தில் 6 லட்சம் பேர் பயன் பெற்றனர் எனவும் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் இந்த திட்டத்தில் மணப்பெண்ணுக்கு பட்டு சேலையும், மணமகனுக்கு பட்டு வேட்டியும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
News August 20, 2025
ராணிப்பேட்டையில் ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 20) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News August 20, 2025
ராணிப்பேட்டையில் லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு…

ராணிப்பேட்டை மக்களே லைசன்ஸ் அப்ளை செய்வது, லைசன்சில் முகவரியை திருத்தம் செய்வது, அலைபேசி எண்கள் சேர்ப்பது போன்றவற்றை வீட்டில் இருந்தபடியே இந்த லிங்க் மூலம் செய்துகொள்ளலாம். அதுமட்டுமன்றி <