News October 17, 2025

அரக்கோணம்: போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த மூவர்!

image

அரக்கோணம், தக்கோலம் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில், அசாம் மாநிலத்தை சேர்ந்த சர்வன்குமார், தன்வீர் & சின்டுயாதவ் என்ற பெண் ஆகியோர் மத்திய காவலர் பணியில் சேர தேர்வாகினர். மூவரும், தக்கோலம் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில், ஜனவரியில் பயிற்சியில் சேர்ந்தனர். இவர்கள் சான்றிதழ்களின் உண்மை தன்மை ஆய்வு செய்தபோது, அவை போலி என தெரிந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News October 18, 2025

ராணிப்பேட்டை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேற்று (அக்.17) விடுத்துள்ள செய்தி குறிப்பில், வடகிழக்கு பருவமழை காலத்தில் நவம்பர் மாத அரிசியை, ரேஷன் கடைகளில் வாங்க இயலாதவர்கள் அக்டோபர் மாதமே பெற்றுக் கொள்ளலாம். அதே நேரம் நவம்பர் மாதம் வாங்க விரும்பினாலும் அந்த மாதம் வாங்கலாம். மேலும் அரிசி மட்டுமே இப்படி வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 18, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் (அக்-17) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், தங்களது உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 17, 2025

ராணிப்பேட்டை: டாஸ்மாக் கடை முன்பு பெண்கள் போராட்டம்

image

அம்பரிஷிபுரம் ஊராட்சி ஜடேரி அருந்ததி பாளையம் பகுதியில் டாஸ்மாக் அரசு மது கடை இயங்கி வந்தது. இந்த கடையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பெண்கள் இன்று அக்டோபர் 17ம் தேதி கடை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதைதொடர்ந்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உத்தரவின் பேரில் கடையில் இருந்த அனைத்து மது பாட்டில்களும் வேறு கடைக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

error: Content is protected !!