News March 29, 2024
அரக்கோணம் தொகுதி: 29 வேட்பு மனுக்கள் ஏற்பு

மக்களவை தேர்தலில், அரக்கோணம் தொகுதியில் போட்டியிட ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெறப்பட்ட 44 மனுக்களில், இருமுறை சமர்ப்பிக்கப்பட்ட 10 மனுக்களும் முதல் மனுவுடன் இணைக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இணைக்கப்படாத 5 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, அரக்கோணம் தொகுதியில் 29 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
Similar News
News February 17, 2026
ராணிப்பேட்டை: VOTER ID தொலஞ்சிருச்சா..? CLICK NOW

ராணிப்பேட்டை மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம். <
News February 17, 2026
ராணிப்பேட்டையில் வெடிகுண்டா?

ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு இ-மெயில் மூலம் நேற்று (பிப்.16) மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அனால் இது பொய் செய்தி என தெரிய வந்தது. ஏற்கனவே கடந்த ஜனவரி 6-ஆம் தேதி நீதிமன்ற வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்ததால் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.
News February 17, 2026
ராணிப்பேட்டையில் வாலிபர் துடிதுடித்து பலி!

திருமலைச்சேரியை சேர்ந்த தனியார் கம்பனி ஊழியர் பிரவீன்குமார் (21). இவர் நேற்று (பிப்.16) அதிகாலை வீட்டுக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது சென்னை-பெங்களூரு NH -ல் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்த பைக் முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் தூக்கி வீசப்பட்ட பிரவீன்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


