News March 28, 2024
அரக்கோணம்: ஓடும் ரயிலில் 3 சவரன் செயின் பறிப்பு

அரக்கோணத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார ரயிலில் சுசிலா(64) என்பவர் தனது மகனுடன் உட்கார்ந்திருந்தார். ரயில் புறப்பட்ட சில நிமிடங்களில் சுசீலாவின் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் செயினை வாலிபர் ஒருவர் பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார். இச்சம்பவம் குறித்து அரக்கோணம் ரயில்வே போலீசில் நேற்று(மார்ச் 27) இரவு சுசிலா புகார் கொடுத்தன் பேரில், ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 6, 2026
வாலாஜாவில் பரிதாப பலி!

ராணிப்பேட்டை: வாலாஜாவை அடுத்த பெல்லியப்பா நகர் அதியமான் தெருவைச் சேர்ந்தவர் சிவசண்முகம்(49). தொழிலாளியான இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலாஜா பூ மார்க்கெட் அருகே சாலையோரம் நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று திடீரென அவர் மீது மோதியது. அதில், படுகாயமடைந்த அவர் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
News April 6, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஏப்.05) இரவு 10 மணி முதல் இன்று (ஏப் -05) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News April 6, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஏப்.05) இரவு 10 மணி முதல் இன்று (ஏப் -05) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


