News December 14, 2024

அரக்கோணம் அருகே ரப்பர் படகு மூலம் 4 பேர் மீட்பு

image

அரக்கோணம் அடுத்த தக்கோலம் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் இரண்டு வீடுகள் அமைந்துள்ளன. இரு நாட்களாக பெய்த கனமழையால் இரண்டு வீடுகளையும் மழை நீர் சூழ்ந்துகொண்டது. இதனால் அவர்கள் வெளியே வர முடியாமல் தத்தளித்த நிலையில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் ரப்பர் படகில் நேற்று அங்கு சென்று இரு ஆண்கள் , இரண்டு பெண்களை மற்றும் 12 ஆடுகள், 25 கோழிகளை பாதுகாப்பாக மீட்டனர்.

Similar News

News August 14, 2025

ராணிப்பேட்டை காவல்துறையின் விழிப்புணர்வு செய்தி

image

ராணிப்பேட்டை காவல்துறை இன்று வெளியிட்ட விழிப்புணர்வுச் செய்தியில், குழந்தைகளுக்கு `குட் டச், பேட் டச்’ குறித்து கற்பிக்க வலியுறுத்தியுள்ளது. முக்கியமாக, மகள்களுக்கு மட்டுமல்லாமல் மகன்களுக்கும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. குழந்தைகளுக்குப் பாதுகாப்பு தேவைப்படும்போது உதவ, குழந்தைகள் உதவி எண் 1098 தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. \

News August 14, 2025

ராணிப்பேட்டை: B.Sc, B.C.A, M.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில் <<>>வரும் செ.9க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News August 14, 2025

ராணிப்பேட்டை: டிகிரி போதும்! வங்கியில் வேலை

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள 5180 ஜூனியர் அசோசியேட் (கிளர்க்) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் தமிழகத்தில் மட்டும் 380 காலி இடங்கள் உள்ளன. ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 20-28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதற்கான தேர்வு மொத்தம் 14 இடங்களில் நடைபெறும். கடைசி நாள்: ஆகஸ்ட் 26. மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்க இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்யவும். ஷேர்!

error: Content is protected !!