News April 24, 2024
அரக்கோணம் அருகே நிலத்தகராறில் வெட்டு!

அரக்கோணம் அடுத்த கிழவனம் கிராமத்தை சேர்ந்தவர் பரந்தாமன்(45). ஆட்டோ ஓட்டுநரான இவரது உறவினர்கள் பாஸ்கரன், கவாஸ்கர், ராஜ்குமார். இந்த இரு குடும்பத்துக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று(ஏப்.22) இரவு பரந்தாமனை பாஸ்கரன் தரப்பினர் கத்தியால் வெட்டியுள்ளனர். படுகாயமடைந்த பரந்தாமன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 3, 2026
ராணிப்பேட்டையில் அடிக்கடி கரண்ட் கட்டா?

தமிழகத்தில் மின் நுகர்வோரின் புதிய மின் இணைப்பு, மின் தடை உள்ளிட்ட 37 விதமான புகார்களை நிவர்த்தி செய்ய ‘மின்னகம்’ என்ற சேவை மையம் செயல்படுகிறது. இதுவரை பல லட்சம் புகார்கள் பெறப்பட்டு, புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த மையத்தை 9498794987 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். மேலும், 9445855768 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் புகாரளிக்கலாம். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்
News January 3, 2026
ராணிப்பேட்டை: போஸ்ட் ஆபீஸில் ரூ.29,380 சம்பளத்தில் வேலை!

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே! நமது இந்திய தபால் துறையின் கீழ் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 2292 காலியிடங்கள் உள்ளன. 10th,+2, டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <
News January 3, 2026
ராணிப்பேட்டை: உங்களிடம் ரேஷன் கார்டு உள்ளதா?

ராணிப்பேட்டை மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.


