News January 29, 2026
அரக்கோணத்தில் இருளில் மூழ்கிய மக்கள்!

ராணிப்பேட்டை; அரக்கோணம் மின் கோட்டம் இச்சிபுத்தூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வாணியம்பேட்டை, பால கிருஷ்ணாபுரம், முசல் நாயுடு கண்டிகை, அரக்கோணம் நகர எல்லை பகுதிகளான ராகவேந்திரா நகர், நாகம்மாள் நகர், கைனூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று(ஜன.28) மாலை மின் தடை ஏற்பட்டது. சுமார் 6 மணி நேரமாக அப்பகுதிகள் இருளில் மூழ்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
Similar News
News February 14, 2026
ரயில் நிலையத்தில் முதல்வருக்கு வரவேற்பு

திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடியில் இன்று பிப்.14 ல் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி குழு மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ரயில் மார்க்கத்தில் சென்றார். அரக்கோணம் ரயில் நிலையத்தில் திமுக நகர்மன்ற குழு தலைவர் துரைசீனிவாசன் முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தார். அப்போது நகராட்சி கவுன்சிலர்கள் நந்தாதேவி, அன்பு ,ரேவதி கன்னியப்பன் உடன் இருந்தனர்.
News February 14, 2026
ராணிப்பேட்டை: பெண் குழந்தைக்கு ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 14, 2026
ராணிப்பேட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டை நகரில் வருகின்ற பிப்ரவரி 20 வெள்ளிக்கிழமை அன்று பழைய bsnl அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. சுமார் 25க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் 300 பணி காலி இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக முகாம் நடைபெறுகிறது. கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை. மேலும் விவரங்களுக்கு 94 990 55 897 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


