News February 27, 2026

அரக்கோணத்தில் அதிமுக எம்.எல்.ஏ கண்டனம்!

image

ராணிப்பேட்டை: அரக்கோணம் தொகுதியில் திருப்பதி – காஞ்சிபுரம் பைபாஸ் சாலைப் பணிகள் நிறைவடையாத நிலையில் பாலம் திறக்க முயற்சி நடைபெறுவதாக கூறப்படுகிறது. மேல்பாக்கம் ரயில்வே பாலம் உள்ளிட்ட பணிகள் முடியாததால், அரக்கோணம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி தலைமையில் கட்சி நிர்வாகிகள் பைக்கில் அணிவகுத்து சென்று இடத்தை பார்வையிட்டு பத்திரிகையாளர்களிடம் கண்டனம் தெரிவித்தனர்.

Similar News

News March 2, 2026

ராணிப்பேட்டை: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News March 2, 2026

சோளிங்கர்: முட்டிபோட்டு மலை ஏறிய திமுக பிரமுகர்!

image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வர வேண்டி, சோளிங்கரில் திமுக பிரமுகர் விஜய் சாஸ்திரி முட்டிப் போட்டு மலை ஏறி வினோத வழிபாடு நடத்தினார். ​சோளிங்கர் மத்திய ஒன்றிய திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் விஜய் சாஸ்திரி, நேற்று (மார்ச் 1) சோளிங்கர் யோக ஆஞ்சநேயர் மலைக் கோயிலின் 405 படிகளையும் முட்டிப் போட்டு ஏறிச் சிறப்பு வழிபாடு செய்தார்.

News March 2, 2026

வாலாஜா அருகே தூக்கிட்டு தற்கொலை!

image

ராணிப்பேட்டை: வாலாஜா தாலுகா அம்மூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(49). வேலம் உயர் நிலைப் பள்ளி அலுவலரான இவருக்கு விஜயா(35) என்ற மனைவியும். எத்தீஷ்(10) என்ற மகனும், இனியா(8) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டதால் செந்தில் குமார், மன வேதனையில் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், தனியார் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

error: Content is protected !!