News September 24, 2024
அரகண்டநல்லூரில் மரங்களுக்கு அஞ்சலி செலுத்திய மக்கள்

அரகண்டநல்லூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகில் சாலை விரிவாக்கப் பணி நடைபெற உள்ளது. இதற்காக வெட்டப்படும் மரங்களை காக்கும் வகையில், வெட்டப்பட்ட மரங்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தினை வேறு இடத்தில் நடவு செய்ய திட்டமிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் பாலசக்தி, பசுமை தாயகம் மாநில துணை செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News August 30, 2025
விழுப்புரம் : ரூ.1,20,000 சம்பளத்தில் வேலை… சூப்பர் வாய்ப்பு!

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனத்தில் பீல்டு இன்ஜினியர், பீல்டு சூப்பர்வைசர் பணிக்கு 1,543 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சிவில், எலெக்ட்ரிக்கல், ECE, IT அல்லது அதற்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.23,000-ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் செப்.17-க்குள் <
News August 30, 2025
பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் பணிநீக்கம்

விழுப்புரம் நகர பகுதியில் இயங்கி வரும் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவிகள் மூன்று பேரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆங்கில பாட ஆசிரியர் பால் வின்சென்ட் என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ஆசிரியர் பால் வின்சென்ட் இன்று (சனிக்கிழமை) பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
News August 30, 2025
விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்.

வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி, விழுப்புரம் – நாகை இடையே செப்.8 மெமு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. விழுப்புரத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் ரயில், மதியம் 1.05 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடையும். பின்னர், அங்கிருந்து மதியம் 1.20 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு விழுப்புரத்தை வந்தடையும். இந்த ரயில்கள் கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.