News November 25, 2025
‘அம்மா Sorry.. என் சாவுக்கு இவர்தான் காரணம்’

சத்தீஸ்கரில் தனியார் பள்ளியில் மாணவி(15) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரின்சிபல் பாலியல் தொல்லை கொடுத்ததே, தனது சோக முடிவுக்கு காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு அவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், பிரின்சிபலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்களே அவசரப்படாதீர், தற்கொலை எதற்கும் தீர்வல்ல!
Similar News
News November 27, 2025
போடி: ஆதரவற்ற குழந்தைகளுக்கு சீருடை வழங்கிய எம்பி

போடி ஒன்றியம் கோடாங்கிபட்டியில் ஆதரவற்ற இல்லத்தில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின், பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச சீருடைகளை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் இன்று வழங்கினார். அருகில் ஒன்றிய செயலாளர் ஐயப்பன். அயலக அணி செயலாளர் ராஜன், முஜிப் ரஹ்மான் மற்றும் திமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், ஆதரவற்ற குழந்தைகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
News November 27, 2025
டாஸ்மாக் கடைகளில் ரூல்ஸ் மாறியது

TN முழுவதும் காலி பாட்டிலை திரும்பப் பெறும் திட்டம் நவ.30-க்குள் அமலுக்கு வரவுள்ளது. ஏற்கெனவே 15 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள நிலையில், திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த திட்டம் அமலாகியுள்ளது. அதன்படி, QR CODE, கடை எண் ஒட்டப்பட்ட மதுபாட்டில் விநியோகம் செய்யப்படும். மது பாட்டிலுக்கு ₹10 அதிகம் கொடுத்து வாங்கிவிட்டு, அதே கடையில் காலி பாட்டிலை கொடுத்து பணத்தை திரும்பப் பெறலாம்.
News November 27, 2025
கடலோர பகுதிகளுக்கு நாளை இரவு முக்கிய எச்சரிக்கை

இந்திய பெருங்கடலில் உள்ள சுமத்திரா தீவில் 6.5 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் பதிவானது. இதன் எதிரொலியாக நாளை இரவு 8.30 – 11.30 மணி வரை, 2.7-3.3 மீட்டர் அளவுக்கு அலைகள் எழும்பும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் மற்றும் மீனவர்களின் உபகரணங்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


