News April 19, 2024
அம்மாபேட்டை: 6 மணிக்கு மேல் வாக்கு பதிவுக்கு அனுமதி

ஈரோடு மாவட்டத்தில் இன்று மாலை 6 மணியுடன் பல்வேறு பகுதிகளில் வாக்கு பதிவு நிறைவு பெற்றது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அடுத்த ஊமாரெட்டியூர் வாக்கு சாவடி எண் 28ல் 6 மணிக்கு முன்னர் 70க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்தனர். இவர்களுக்கு வாக்குச்சாவடி தேர்தல் நடத்தும் அலுவலர் டோக்கன் வழங்கி வாக்களிக்க அனுமதியளித்தார்.
Similar News
News February 6, 2026
தேசிய குடற்புழு நீக்க நாள் சிறப்பு முகாம்!

ஈரோடு மாவட்டத்தில் பிப்ரவரி 10-ஆம் தேதி தேசிய குடற்புழு நீக்க முகாம் நடைபெற உள்ளது. இதில் 1 முதல் 19 வயதுடைய சிறுவர்கள் மற்றும் 20 முதல் 30 வயதுடைய பெண்களுக்கு அல்பெண்டசோல் மாத்திரைகள் அங்கன்வாடி மற்றும் கல்வி நிறுவனங்களில் இலவசமாக வழங்கப்படும். அன்று விடுபட்டவர்களுக்கு பிப்ரவரி 17-ல் மாத்திரைகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News February 6, 2026
ஈரோடு: வீட்டு வரி செலுத்துவது இனி ஈஸி!

ஈரோடு மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <
News February 6, 2026
ஈரோடு: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY!

ஈரோடு மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <


