News September 7, 2025
அம்பை புலிகள் காப்பக துணை இயக்குனர் இடமாற்றம்

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் புலிகள் காப்பகத் துணை இயக்குனர் இளையராஜா தூத்துக்குடி மாவட்ட வனத்துறை அதிகாரியாக இடமாற்றம். அதே போல் களக்காடு துணை இயக்குனர் ராமேஸ்வரன் பதவி உயர்வு பெற்று சென்னை முதன்மை தலைமை வன பாதுகாவலராக நியமனம். திருவாரூர் வன அதிகாரி ஸ்ரீகாந்த் பதவி உயர்வு பெற்று அம்பாசமுத்திரம் புலிகள் காப்பக துணை இயக்குனராக பொறுப்பேற்க உள்ளார்.
Similar News
News September 7, 2025
நெல்லை: சான்றிதழ் தொலைந்து விட்டதா.. இனி NO கவலை..!

பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் சேதமடைந்திருந்தாலோ, அல்லது காணாமல் போயிருந்தாலோ அதனை எளிதாக பெறும் நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. சான்றிதழ்களை பெறும் சிரமங்களை போக்கவும், அலைச்சலை குறைக்கவும், “E-பெட்டகம்” என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. <
News September 7, 2025
நெல்லை: இ-ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிப்பது எப்படி?

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
▶️விண்ணபிக்க இந்த <
▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
▶️விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.
தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News September 7, 2025
ஒரே நாளில் 2 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

கலியாவூரை சேர்ந்த செய்யது இப்ராஹிம் ஷா, குறிச்சியை சேர்ந்த முத்துக்குமார் ஆகியோர் ஆகிய 2 பேரும் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போக்சோ மற்றும் அடிதடி வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் இரண்டு பேரையும் எஸ்பி சிலம்பரசன் பரிந்துரைப்படி கலெக்டர் சுகுமார் உத்தரவுப்படி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.