News May 22, 2024
அம்பையில் எம்எல்ஏ கண்டன உரை

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தொழிற்சாலையை அரசு எடுத்து நடத்திட, மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த கோரி வருகிற 24ஆம் தேதி அம்பை கல்யாணி தியேட்டர் அருகில் மாலை எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது .இதில் எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக், அம்பை சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா ஆகியோர் கண்டன உரையாற்ற உள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது.
Similar News
News September 16, 2025
மாநகரில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (செப்.15) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News September 15, 2025
நெல்லை உழவர் நல சேவை மையம் அழைப்பு

நெல்லை மாவட்டத்தில் 30 சதவீத மானியத்தில் 10 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான உழவர் நல சேவை மையம் அமைக்க வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் துறையில் படித்த இளைஞர்கள் முன் வரலாம். தகுதியானவர்கள் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித்தார்.
News September 15, 2025
நவதிருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

புரட்டாசி மாத சனிக்கிழமை நாட்களில் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நவதிருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன இதன்படி வருகிற 20, 27 அக்.4, 11 ஆகிய நாட்களில் காலை 6 மணிக்கு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படும். சென்று திரும்பி வருவதற்கு கட்டணம் ஒரு நபருக்கு ரூ.500 புதிய பஸ் நிலையத்தில் முன்பதிவு செய்யலாம் அல்லது www.tnstc.in என்ற இணையதளம் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.