News April 12, 2024
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு உறுதிமொழி

இன்று (12.04.2024) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி. க. சங்கீதா, இ.ஆ.ப., மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.
Similar News
News April 18, 2025
காஞ்சிபுரம் ரயில் பயணிகளுக்கு பிரத்யேக செயலி (APP)

ரயில்களில் பயணம் செய்யும்போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்யேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. ‘RAIL MADDED’ என்ற அப்ளிகேஷனை இந்த <
News April 18, 2025
கிணற்றில் விழுந்த நாய் உயிருடன் மீட்பு

காஞ்சிபுரம் மாவட்டம் காமராஜர் வீதி பின்புறம் உள்ள சேக்குபேட்டை பகுதியில், பயன்பாட்டில் இல்லாத 50 அடி ஆழம் கொண்ட தண்ணீர் இல்லாத பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. சுற்றுச்சுவர் இல்லாத இந்த கிணற்றில், நேற்று (ஏப்ரல் 17) மாலை அங்கு சுற்றித்திரிந்த நாய் ஒன்று தவறுதலாக விழுந்துவிட்டது. தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினர், அரை மணி நேரம் போராடி நாயை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
News April 17, 2025
குழந்தை பாக்கியம் கிடைக்க சிறப்பான கோயில்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்த திருமாலின் திவ்ய தேச கோவில்களில் திருவூரகம் உலகளந்த பெருமாள் கோவில் 50 வது திவ்ய தேச கோவிலாக போற்றப்படுகிறது. இத்தலம் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும்.1000 முதல் 2000 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில்சாமி தரிசனம் செய்தால் குழந்தைப்பேர் கிடைக்குமென்று சிறப்பும் உள்ளது, குழந்தை தடை உள்ளவர்களுக்கு இந்த செய்தியை பகிரவும்.