News May 24, 2024

அம்பலூர் அருகே இருவருக்கு அரிவாள் வெட்டு 

image

வாணியம்பாடி அடுத்த மாந்தோப்பு பகுதியில் உள்ள ரவீந்திரன் குடும்பத்தினருக்கும், சர்மா குடும்பத்தினருக்கும் இடையே நில தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ரவீந்திரன் மகன்கள் வினோத் மற்றும் சக்தி ஆகிய இருவரையும் புவியழகன் இன்று அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த இருவரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புவியழகனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News July 10, 2025

திருப்பத்தூர்: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்

image

ஏழை எளிய மக்களுக்கு வீடு வழங்கும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் புதியாக 1 லட்சம் வீடுகள் கட்டபட உள்ளது. இதில் வீடு கட்ட ரூ.3.50 லட்சம் மானியம் வழங்கப்படும். வயதானோர்/ ஆதரவற்றோருக்கு அரசே கட்டுமான பணிகளை செய்து தருகிறது. இதற்கான KVVT survey குழுவினர் பயனாளிகளை தேர்வு செய்வார்கள். தனியாக விண்ணப்பிக்க விரும்பினால் ஊராட்சி மன்ற/ ஆட்சியர் அலுவலகத்தை (04179222111) அழைக்கலாம்.ஷேர் பண்ணுங்க. <<17015887>>தொடர்ச்சி<<>>

News July 10, 2025

கலைஞர் கனவு இல்லத் திட்ட விவரங்கள்

image

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் சேர சொந்தமாக 350 ச.அடி நிலமும், பட்டாவும் இருக்க வேண்டும். சொந்தமாக கான்கிரீட் வீடு இருக்க கூடாது. குடிசை வீடு எனில் ஒரு பகுதி ஓடு/ கான்கீரிட்டாக இருக்க கூடாது. கிராமப்புறத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். அந்த நிலத்தை வணிக நோக்கில் பயன்படுத்தி வந்தால், விண்ணப்பிக்க இயலாது. *சொந்த வீடு கனவை நனவாக்கும் சூப்பர் திட்டம் சீக்கிரம் அப்ளை பண்ணுங்க. அப்டியே ஷேர் பண்ணுங்க*

News July 10, 2025

திருப்பத்தூர் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு தொடக்கம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 10) முதல் மாற்றுத்திறனாளிகளின் முழுமையான விவரங்களை சேகரிக்கும் பணி தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்தரவல்லி தெரிவித்துள்ளார். இப்பணியின் மூலம், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் அவர்களது இல்லம் தேடி செல்வதற்கான புதிய முயற்சியாகும். மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூகநலத்துறை இணைந்து இப்பணியை மேற்கொள்கின்றன.

error: Content is protected !!