News September 7, 2025
அம்பத்துாரில் திடீர் பள்ளம்

அம்பத்துார் தொழிற்பேட்டை சாலையில் நேற்று மாலை திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை செய்யபட்டது. சிட்கோ நிர்வாகத்தினர் அங்கு சென்றனர். சாலை 10 அடி அகலத்திற்கு பலவீனமாக இருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து சாலையை தோண்டி, பள்ளத்தில் மணல் கலவையை கொட்டி, சாலையை சீரமைத்தனர். அதன்பின், அங்கு போக்குவரத்து சீரானது. 2 வாரங்களில், 2 முறை மண் அரிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 8, 2025
FLASH: ஸ்தம்பித்த சென்னை

மீலாது நபி, சனி, ஞாயிறு தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் வசிப்பவர்கள், தங்கி பணிபுரிபர்கள் என மக்கள் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் படையெடுத்துச் சென்றனர். இந்நிலையில் தற்போது விடுமுறை முடிந்ததால், நேற்று முதல் சென்னையை நோங்கி வர ஆரம்பித்துள்ளனர். இதனால் பெருங்களத்தூர், தாம்பரம், ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
News September 8, 2025
தி.நகர்: பாஜக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் உள்ளது. இங்கு, தினமும் கட்சியின் மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் வந்து, கட்சி பணிகள் தொடர்பாக ஆலோசனை செய்வர். இந்நிலையில், கமலாலயத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக, டிஜிபி., அலுவலகத்திற்கு மின்னஞ்சல் வந்தது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டனர். ஆனால், அது புரளி என உறுதி செய்யப்பட்டது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
News September 8, 2025
சென்னையில் இன்று ( 7/09/2025) இரவு காவல் ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று ( 7/09/2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.