News January 15, 2025
அமைச்சர் வேலுவிற்கு வாழ்த்து தெரிவித்த ஐஸ்வர்யா

தைத்திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சருமான எ.வ.வேலுவை, நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா, நேற்று (ஜன.14) அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் நினைவுப்பரிசு கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதில், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Similar News
News August 21, 2025
தி.மலை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 21) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 21, 2025
தி.மலை: டிகிரி போதும்; ரூ.64,000 சம்பளத்தில் வங்கி வேலை

REPCO வங்கியில் Customer Service Associate/ Clerk வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். இந்த பணிக்கு மாதம் ரூ.24,050 – ரூ.64,480 வரை வழங்கப்படும். முக்கியமாக இந்த பணிக்கு online தேர்வு மட்டுமே, நேர்முக தேர்வு கிடையாது. விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News August 21, 2025
திருவண்ணாமலை மாவட்டத்தில் பணியிட மாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) செல்வம் தி.மலை மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலராகவும், அங்கு பணியாற்றிய சிராஜ் பாபு சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றுவாரியம் துணை ஆட்சியராகவும், நீலகிரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சதீஷ்குமார், திருவண்ணாமலை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.