News August 13, 2024

அமைச்சர் மெய்யநாதனை சந்தித்து வாழ்த்து பெற்ற மேயர்

image

சென்னையில் தமிழக முதலமைச்சர் புதுக்கோட்டை மாநகராட்சியாக அறிவித்து அதற்கான ஆணையை புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் இடம் வழங்கினார். அதனைப் பெற்றுக் கொண்ட மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதனிடம் காண்பித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் மாநகரச் செயலாளர் செந்தில் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Similar News

News November 5, 2025

புதுகையில் ரூ.5 லட்சம் இலவச காப்பீடு: Apply பண்ணுங்க!

image

புதுகை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் புதுகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!

News November 5, 2025

புதுகை: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் விழா பணி

image

புதுக்கோட்டை மாவட்டம் களமாவூரில் நவ.10 இல் நடக்கும் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழாவிற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பணிகள் குறித்து கலெக்டர் மு.அருணா, மாவட்ட எஸ்பி அபிஷேக்குப்தா ஆகியோர் அவரிடம் விளக்கி கூறினர். இந்த ஆய்வின்போது திமுக வடக்கு மாவட்ட செயலர் கே.கே.செல்லப்பாண்டியன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

News November 5, 2025

புதுகை: பி.எம் கிசான் திட்டம் குறித்து ஆட்சியர் தகவல்

image

புதுகை மாவட்டத்தில் பி.எம் கிசான் திட்டத்தில் பயன்பெற தனித்துவ அடையாள அட்டை எண் அவசியம், இத்திட்டத்தில் இதுவரை 88,730 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். 21வது தவணை வரவு வைக்கப்பட உள்ள நிலையில், விவசாயிகள் ஆதார் அட்டை, கணினி சிட்டா, ஆதாருடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண் ஆகியவற்றை அனைத்து வட்டார வேளாண் உதவிய இயக்குநர் அலுவலகங்களிலும் இ.சேவை மையத்தில் பதிவேற்றம் செய்யலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!