News March 20, 2025
அமேசான், பிளிப்கார்ட் கிடங்குகளில் திடீர் சோதனை

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமேசான், பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான கிடங்குகளில் இந்திய தர நிர்ணய அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் BIS முத்திரை இல்லாத உலோக குடிநீர் பாட்டில்கள், குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் என ரூ.36 லட்சம் மதிப்பிலான தரமற்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தரமற்ற பொருட்கள் விற்பனை செய்வதாக புகார் எழுந்த நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
Similar News
News March 21, 2025
ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்

திருத்தணியை சேர்ந்த பிளஸ் 1 மாணவியிடம், ஜோதிநகரை சேர்ந்த வெங்கடேசன் (26) , காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார், இதை நம்பிய அம்மாணவியை மூன்று நாட்களுக்கு முன் ஆந்திர மாநிலத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து,நேற்று வெங்கடேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
News March 21, 2025
திருவள்ளூரில் கிராம சபை கூட்டம் தேதி மாற்றம்

திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், உலக தண்ணீர் தினம் 23.03.2025 அன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம், நிர்வாக காரணங்களால் கிராம சபை கூட்டம் வரும் 29.03.2025 அன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்து உள்ளார். இதில் மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதான் தெரிவித்துள்ளார்.
News March 20, 2025
திருவள்ளூர் மாவட்ட இரவு ரோந்து போலீஸ் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள (20-03-2025) வியாழக்கிழமை அன்று இரவு ரோந்து போலீசார் விவரங்களை காவல் நிலையம் வாரியாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் குற்ற சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் குறித்து தகவல்கள் தெரிவிக்க மேற்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.