News August 30, 2025
அமெரிக்க வரி விதிப்பால் இறால் ஏற்றுமதி பாதிப்பு

விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இறால் பண்ணை விவசாயிகள், அமெரிக்காவின் 50% இறக்குமதி வரியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள இறால் தேக்கமடைந்துள்ளது. இறால் பண்ணைத் தொழிலைக் காக்க, அரசு மாற்று ஏற்றுமதி சந்தைகளை கண்டறிய வேண்டும், உள்நாட்டு நுகர்வை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Similar News
News August 30, 2025
விழுப்புரம் : ரூ.1,20,000 சம்பளத்தில் வேலை… சூப்பர் வாய்ப்பு!

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனத்தில் பீல்டு இன்ஜினியர், பீல்டு சூப்பர்வைசர் பணிக்கு 1,543 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சிவில், எலெக்ட்ரிக்கல், ECE, IT அல்லது அதற்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.23,000-ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் செப்.17-க்குள் <
News August 30, 2025
பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் பணிநீக்கம்

விழுப்புரம் நகர பகுதியில் இயங்கி வரும் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவிகள் மூன்று பேரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆங்கில பாட ஆசிரியர் பால் வின்சென்ட் என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ஆசிரியர் பால் வின்சென்ட் இன்று (சனிக்கிழமை) பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
News August 30, 2025
விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்.

வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி, விழுப்புரம் – நாகை இடையே செப்.8 மெமு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. விழுப்புரத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் ரயில், மதியம் 1.05 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடையும். பின்னர், அங்கிருந்து மதியம் 1.20 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு விழுப்புரத்தை வந்தடையும். இந்த ரயில்கள் கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.