News December 11, 2025
அமித்ஷா பதிலில் பதட்டம் தெரிந்தது: ராகுல்

மக்களவையில் வாக்கு திருட்டு குறித்த அமித்ஷாவின் பதிலில் பதட்டம் தெரிந்ததாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பாஜகவினருக்கு பல மாநிலங்களில் வாக்குரிமை இருப்பது பற்றியோ, தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் இருந்து CJI நீக்கியது குறித்தோ அவர் எந்த பதிலையும் அளிக்கவில்லை. CCTV வழங்கப்படாததற்கு அவர் கூறிய காரணம் அபத்தமாக இருந்ததாகவும் ராகுல் விமர்சித்துள்ளார்.
Similar News
News December 12, 2025
₹50 லட்சம்.. 20 நாள்களில் கிடைத்த அதிர்ஷ்டம்

ம.பி.,யின் பன்னா மாவட்டம் கனிம வளங்கள் நிறைந்தது. அங்கு கூலி வேலை செய்யும் சதிஷ், சஜித் என்ற நண்பர்கள், கஷ்டப்பட்டு பணத்தை தயார் செய்து, சுரங்கம் ஒன்றை 20 நாள்களுக்கு முன்னர் குத்தகைக்கு எடுத்துள்ளனர். அதில் தோண்டியதில் ₹50 லட்சம் மதிப்பு மிக்க வைரம் அவர்களுக்கு கிடைத்துள்ளது. சஜித்தின் தாத்தாவும், தந்தையும் பல ஆண்டுகளாக தோண்டியும் கிடைக்காத அதிர்ஷ்டம், இவர்களுக்கு 20 நாள்களில் கிடைத்துள்ளது.
News December 12, 2025
விவேகானந்தர் பொன்மொழிகள்

*நீங்கள் எதை நம்புகிறீர்களோ, அதுவாகவே ஆகிறீர்கள். *இந்த உலகின் வரலாறு என்பது தங்களைத் தாங்களே நம்பிய ஒரு சில மனிதர்களின் வரலாறாகும். *யாரையும் குறை கூறாதீர்கள், அறிவற்றவர்கள் செய்யும் தவறைச் செய்யாதீர்கள். *உண்மையான முன்னேற்றம் என்பது மெதுவானது ஆனால் நிச்சயமானது. *நீங்கள் எல்லையற்றவர். எல்லாச் சக்தியும் உங்களிடம் உள்ளது. உங்களால் எதையும் சாதிக்க முடியும்.
News December 12, 2025
ஆட்சி கவிழ்ப்பிற்கு பிறகு முதல் பொதுத்தேர்தல் அறிவிப்பு

ஆட்சி கவிழ்ப்பு ஏற்பட்ட வங்கதேசத்தில், 2026 பிப்ரவரி 12-ம் தேதி பொதுத்தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 300 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. இதனுடன் அரசியல் சாசன திருத்தத்திற்கான பொது வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது. அந்நாட்டின் முக்கிய கட்சியான ஷேக் ஹசீனாவின் அவாமி லீக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அக்கட்சி இத்தேர்தலில் போட்டியிட முடியாது.


