News October 23, 2024

அமலாக்கத்துறை அதிகாரி வழக்கில் நீதிமன்றம் அனுமதி

image

திண்டுக்கல்லில் லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் வெளியில் இருக்கும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கீத் திவாரி வழக்கின் விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் சூரியகாந்த் அமர்வில் நடந்தது. இடைக்காலமாக தனது சொந்த ஊருக்கு அங்கீத் சென்று திரும்ப உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மீண்டும் 9ம் தேதி சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.

Similar News

News January 31, 2026

திண்டுக்கல்: இலவச கேஸ் சிலிண்டர் விண்ணப்பிப்பது எப்படி?

image

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற<> இங்கே கிளிக் <<>>செய்து தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தைத் (Indane/Bharat/HP) தேர்வு செய்யவும்

2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்

3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்

4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555,1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க

News January 31, 2026

எரியோடு அருகே பயங்கர விபத்து!

image

எரியோடு அருகே இன்று அதிகாலை தொட்டணம்பட்டி–நலமானார்கோட்டை இடையே சாலையில் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த எரியோடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் அடையாளம் தெரியாத நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 31, 2026

பழனியில் இன்று முதல் இலவசம்!

image

பழனி தைப்பூசத் திருவிழாவையொட்டி, வ.உ.சி. பஸ் நிலையத்திலிருந்து கோவில் அடிவாரத்திற்குப் பக்தர்கள் சென்று வரக் கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படுவதாகத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதன்படி, இன்று முதல் பிப்ரவரி 2-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு, 3 அரசு டவுன் பேருந்துகள் மற்றும் 3 மினி பேருந்துகள் இந்த இலவச சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இத்திட்டம் பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

error: Content is protected !!