News September 15, 2025
அன்பு கரங்கள் நிகழ்வில் ஆட்சியர் பங்கேற்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் நாளை (15.09.2025) காலை 10:30 மணியளவில் அன்புக் கரங்கள் திட்டத்தினை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார்.
அதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 15, 2025
புதுகையில் வேலை வாய்ப்பு முகாம்

விராலிமலை தனியார் மஹாலில் தனியார் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் நடத்தும் பெண்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் இன்று (செ.15) காலை 10 மணிக்கு தொடங்கி 5 மணி வரை நடைபெறுகிறது. இதில் ஜூனியர் டெக்னீசியன் பணியிடங்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 36 வயது இருக்க வேண்டும். மாத ஊதியம் 20,000 என அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 15, 2025
புதுகை: சாலையோரம் நடந்து சென்றவர் பரிதாப பலி

ஆலங்குடி அடுத்த பாத்தம்பட்டியை சேர்ந்தவர் சிவசாமி (73).இவர் பாத்தம்பட்டி கிளை சாலையில் நடந்து சென்றுள்ளார்.அப்போது அவருக்கு எதிரே பைக்கை ஓட்டி வந்த சுந்தரமூர்த்தி(29) என்பவர் மோதியதில் சிவசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மனைவி அளித்த புகாரில் ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
News September 15, 2025
புதுகை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

புதுகை மாவட்டத்தில் உள்ள மறமடக்கி, அறந்தாங்கி, தல்லாம்பட்டி, அழியாநிலை மற்றும் அரிமளம் ஆகிய துணைமின் நிலையங்களின் நாளை (16/9/2025) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க