News March 21, 2025
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மார்ச் – 29 கிராம சபை

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற உலக தண்ணீர் தினமான 22.03.2025 அன்று நடைபெற வேண்டிய கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களை முன்னிட்டு 29.03.2025 அன்று காலை 11.00 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கிராம சபைக் கூட்டங்களில் பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2025
காஞ்சிபுரம் மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

▶வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகம் – 044-27256090, ▶குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் – 044-24780449, ▶உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம் – 044-27272230, ▶ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகம் – 044-27162231, ▶காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் – 044-27222776, ▶ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் – 9444964899, ▶காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் – 9445000413. ஷேர் செய்யுங்கள்.
News April 20, 2025
ரூ.170 கோடி கடனுக்கு ஆணை வழங்கிய முதல்வர்

குன்றத்தூர் சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நேற்று (ஏப்ரல் 19) அரசு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்து, 8,951 பயனாளிகளுக்கு ரூ.34 கோடி மானியத்துடன் ரூ.170 கோடி கடன் ஒப்புதல் ஆணைகளை வழங்கி சிறப்பித்தார்.
News April 20, 2025
கூட்டுறவு துறை குறித்து பாடல் எழுத அறிய வாய்ப்பு

சர்வதேச கூட்டுறவு ஆண்டு கொண்டாடப்பட உள்ளதால், கூட்டுறவு துறை குறித்த தனி பாடல்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பாடல், 5 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் பாடலுக்கு, 50,000 ரூபாய் ரொக்கம், கேடயம் வழங்கப்படும். தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் tncu08@gmail.com என்ற முகவரிக்கு வரும் மே.30ஆம் தேதிககுள் அனுப்ப வேண்டும் என காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ தெரிவித்தார்.