News April 15, 2025
அனைத்திலும் இந்தி திணிப்பு – சு. வெங்கடேசன் காட்டம்!

மதுரை எம்பி சு. வெங்கடேசன் இன்று (ஏப்.15) அவரது X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி. ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அமைச்சர்களின் பதில்கள் இந்தி. NCERT தொடங்கி எம்பிக்களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தித் திணிப்பு. இனிமேல் எடப்பாடியார் என்பதை இந்தியில்தான் நயினார் நாகேந்திரன் எழுதுவாரா? ” என கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News February 1, 2026
மதுரை வழியாக செல்லும் 3 ரயில்கள் பாதை மாற்றம்

தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மதுரை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட ரயில் வழித்தடங்களில் பிப்ரவரி மாதத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக, மும்பை விரைவு ரயில் ஹௌரா அதிவிரைவு ரயில் (எண்:12666) மற்றும் ஹைதராபாத் செல்லும் ரயில் (எண்:07229) ஆகியவை மதுரை, திண்டுக்கல் வழித்தடத்துக்குப் பதிலாக விருதுநகா், மானாமதுரை, திருச்சி வழியாக இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
News February 1, 2026
மதுரை: இதை தெரிஞ்சுக்க இனி அலையாதீங்க.. ஒரு CLICK போதும்

மதுரை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <
News February 1, 2026
மதுரை: மாடியிலிருந்து விழுந்த தொழிலாளி பலி.!

மேலூரைச் சேர்ந்தவர் சரவணன் 57 கட்டட தொழிலாளியான இவர், ஜெய்ஹிந்த்புரம் தென்றல் நகர் பகுதியில் லட்சுமணன் என்பவர் வீட்டில் கட்டிடத்தில் வேலை செய்து வந்தார். ஜன.28ம் தேதி அன்று சரவணன் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தார். அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


