News June 17, 2024
அனுமதியின்றி போராட்டம் நடத்திய 100 பேர் மீது போலீஸ் வழக்கு

இனயம்புத்தன்துறை பகுதியை சேர்ந்த மீனவர் கிறிஸ்டின்ராஜ் (55) மர்ம மரணத்தை புதுக்கடை போலீசார் தற்கொலை வழக்காக பதிந்து விசாரித்தனர். ஆனால் கொலை வழக்காக சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி இனயம்புத்தன்துறை மீனவர் கிராமத்தில் அனுமதியின்றி ஜூன் 15ம் தேதி சத்தியாகிரக போராட்டம் நடத்தி 2 பேருந்தை சிறைபிடித்தனர். நேற்று இது தொடர்பாக 100 பேர் மீது புதுக்கடை
போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News November 7, 2025
குமரி மாவட்டத்தை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் சாதனை

குமரி மாவட்டத்தை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் திலீபன் என்பவர் சென்னையில் நடைபெறும் 23 வது ஆசிய மாஸ்டர் தடகளப் போட்டியில் உயரம் தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதல் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார். இதன் மூலம் 2026 ஆம் ஆண்டு தென் கொரியா நாட்டில் நடைபெறும் உலக மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். மாவட்ட எஸ். பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
News November 7, 2025
களியக்காவிளையில் வாக்காளர் தீவிர திருத்த பணி

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, விளவங்கோடு சட்டமன்ற வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தூர் ராஜன் அவர்கள் இன்று 7-ம் தேதி விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட களியாக்கவிளை பகுதியில் வாக்குசாவடி நிலை அலுவலர்கள் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவத்தை வாக்காளர்களுக்கு வழங்குவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
News November 7, 2025
குமரி: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

குமரி மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். SHARE IT!


