News September 18, 2024

அனுமதியின்றி சென்ற அரசு பேருந்துகளுக்கு அபராதம்

image

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியில் இருந்து ஒரு வழிப்பாதையில் அனுமதியின்றி சென்ற 7 அரசு பேருந்துகளின் ஓட்டுநர்களுக்கு தலா 500 ரூபாய் வீதம் 3500 ரூபாய் அபராதம் விதித்து உளுந்தூர்பேட்டை போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இன்று போக்குவரத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Similar News

News September 5, 2025

கள்ளக்குறிச்சி: ரூ.1,50,000 சம்பத்தளத்தில் அரசு வேலை!

image

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு சாலை பாதுகாப்பு கண்காணிப்பு அலகு வேலைக்கு பல்வேறு பணிகளுக்காக இப்போது விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது. அதன்படி இந்த பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும், நேர்காணலில் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. மேலும் இந்த பணிக்கு ரூ 40,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. கூடுதல் விவரங்களுக்கு இந்த <>லிங்கில் <<>>சென்று பார்த்துக்கொள்ளலாம். நண்பர்களுக்கு ஷேர் .

News September 5, 2025

கள்ளக்குறிச்சி:ரயில் நிலையத்தில் சடலம் மீட்பு

image

உளுந்தூர்பேட்டை ரயில் நிலையம் அருகே நேற்று சடலம் மீட்கப்பட்டது, விசாரணையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்று தெரியவந்துள்ளது. இவர் கடலூர், வேப்பூரில் உள்ள வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தைக் மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News September 5, 2025

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் விலை நிலவரம்

image

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்று செப்டம்பர் 5காய்கறிகளின் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி 1கிலோ மதிப்பீட்டு தக்காளி ரூபாய் 30 முள்ளங்கி ரூபாய் 30 இஞ்சி ரூபாய் 100 அவரைக்காய் ரூபாய் 60 80 கத்திரிக்காய் ரூபாய் 40 60 பாகற்காய் நாற்பது சுரைக்காய் ரூபாய் 25 பாகல் ரூபாய் 30 பச்சை மிளகாய் 50 புதினா கட்டு ரூபாய் உருளைக்கிழங்கு ரூபாய் 30 என்று விற்பனையாகிறது என நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!