News December 12, 2025
அனுபவம் வாய்ந்த தலைவரை இழந்துவிட்டோம்: PM மோடி

Ex மத்திய உள்துறை அமைச்சர் <<18539967>>சிவராஜ் பாட்டீல்<<>> இன்று காலமானார். அவரது மறைவுக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் X தளப்பதிவில், சிவராஜ் பாட்டீலின் மறைவு செய்தி வருத்தமளிக்கிறது. அனுபவம் வாய்ந்த தலைவரான அவர், சமூக முன்னேற்றத்தின் மீது அக்கறை கொண்டவர். பலமுறை அவருடன் உரையாடியுள்ளேன். அவரது குடும்பத்துக்கு எனது இரங்கல். ஓம் சாந்தி! என குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News April 9, 2026
கிருஷ்ணகிரி: 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை!

கிருஷ்ணகிரி அருகே 6 வயது சிறுமி கடந்த ஏப்.5ஆம் தேதியன்று, வீதியில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின்பேரில், கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுவனை போக்சோவில் நேற்று கைது செய்தனர்.
News April 9, 2026
உதயநிதியின் அரசியலுக்காக நடந்த கலவரம்: ஆதவ்

கரூர் விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கு தொடர்புள்ளதாக CBI அதிகாரிகளிடம் கூறியிருந்ததை பற்றி ஆதவ் அர்ஜுனாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், உதயநிதியின் அரசியலுக்காக செந்தில் பாலாஜி, அன்பில் வழியே நடத்தப்பட்ட திட்டமிட்ட சதிச்செயல் தான் கரூர் சம்பவம் என கூறியுள்ளார். அவர்கள் சின்னதாக கலவரம் செய்ய நினைத்ததாகவும், ஆனால், அது அவர்களுக்கே பின்விளைவை ஏற்படுத்திவிட்டது எனவும் பேசியுள்ளார்.
News April 9, 2026
உங்கள் ஆயுளை நீட்டிக்கும் சீந்தில் மூலிகை..

100 வயது வரை எந்த உடல்நலப் பிரச்னையுமின்றி வாழ இயற்கை கொடுத்த மருந்தே சீந்தில் மூலிகை. சீந்திலின் இலை & தண்டுகளை இரவில் ஊறவைத்து, காலையில் இதனை இடித்து தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நீர் பாதியாக வற்றிய பின் வடிகட்டி அருந்தவும். இப்படி தினசரி செய்துவர, செரிமான பிரச்னை, சுகர், மஞ்சள் காமாலை என சகல நோய்களும் கட்டுப்படும் என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். SHARE.


