News March 21, 2025
அனல் மின் நிலைய தீ விபத்தை தடுக்க குழு அமைப்பு

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் சில தினங்களுக்கு முன்பு பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பல கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அனல் மின் நிலையங்களில் ஏற்படும் தீ விபத்தை தடுக்கும் வகையில் தீ விபத்து பற்றி ஆய்வு மேற்கொள்ளவும், தடுப்பு நடவடிக்கைகள் பற்றி அறிக்கை சமர்ப்பிக்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை பொறியாளர் தலைமையில், குழு ஒன்று அமைத்து உத்தரவிட்டுள்ளது.
Similar News
News August 23, 2025
கிணற்றில் மிதந்த சடலம் யார் என கண்டுபிடிப்பதில் தொய்வு

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே முள்ளன்விளை கிராமத்தின் காட்டு பகுதியில் கிணற்றில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்த உடல் யாருடையது? என்பதை கண்டறிவதில் தொடர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார் திணறி வருகின்றனர்.
News August 23, 2025
தூத்துக்குடி: 10th போதும்! ரூ.71,000 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். <
News August 23, 2025
தூத்துக்குடி: நாய்கள் தொல்லையா.! உடனே அழையுங்கள்..

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் மாணவர்கள் இதனால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், தெருநாய்கள் தொடர்பான புகார்களுக்கு 18002030401 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க*