News January 19, 2026
அந்த 88 மணி நேரம்.. நினைவுகூர்ந்த ராஜ்நாத்

நாக்பூரில் ஒரு வெடிமருந்து ஆலை திறப்பு விழாவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட நாகஸ்திரா ட்ரோனை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் பார்வையிட்டார். அப்போது, ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை சுமார் 88 மணி நேரம் நீடித்தது, அப்போது எதிர்கொண்ட தீவிரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மறுபுறம், புதிய போர் முறைகள் உருவாகி வருகின்றன என்று கூறினார்.
Similar News
News January 27, 2026
10th முடித்தாலே வேலை… APPLY NOW!

இந்தியன் ஆயில் நிறுவனம், தென் மண்டலப் பிரிவில் காலியாக உள்ள 394 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. *கல்வித்தகுதி: 10th, டிகிரி. *தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு & சான்றிதழ் சரிபார்ப்பு. *வயது வரம்பு: 18- 24 வயதுக்குள். *உதவித்தொகை வழங்கப்படும். *கடைசி தேதி: பிப்.10. விருப்பமுள்ளவர்கள் இங்கே கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். SHARE IT!
News January 27, 2026
பிப்ரவரி நடுவில் கூட்டணி முடிவு: பிரேமலதா

பிப்ரவரி மாதம் முழுவதும் நேரம் இருக்கிறது, எனவே நல்ல முடிவெடுத்து பிப்., நடுவில் கூட்டணி பற்றி அறிவிப்போம் என பிரேமலதா கூறியுள்ளார். யார் யாருக்கு எந்த தொகுதி என முடிவு செய்து வேட்பாளர்களை அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுவரை தேமுதிக, தங்களது கூட்டணியை இறுதி செய்யாத நிலையில், நேற்று கவர்னர் தேநீர் விருந்தின்போது தேமுதிகவின் சுதீஷ், அதிமுக தலைவர்களுடன் பேசியது பேசுபொருளானது.
News January 27, 2026
சமஸ்கிருதத்துக்கு ₹2000 கோடி, தமிழுக்கு ₹30 கோடி: அமைச்சர்

கல்வி, 100 நாள் வேலை திட்டம் என பலவற்றுக்கு மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதி வரவில்லை என அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம்சாட்டியுள்ளார். சமஸ்கிருத ஆய்வுக்கு ₹2000 கோடி ஒதுக்கும் போது, தமிழ் செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்கு ₹30 கோடி கூட கொடுக்கவில்லை என்றும் சாடியுள்ளார். முதியோர் ஓய்வூதிய உள்பட பல திட்டங்களுக்கு, தமிழக அரசு நிதி ஒதுக்கி செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.


