News March 22, 2026
அந்த 2 மணி நேரம் மிக முக்கியம்.. இல்லன்னா கஷ்டம்

நீங்கள் சைபர் மோசடியில் பணத்தை இழக்க நேர்ந்தால் பதற்றமடைய வேண்டாம். உடனடியாக 1930 (அ) CyberCrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம். அப்போது மோசடியாளர்கள் செய்த பரிவர்த்தனையை பற்றி வங்கியிடம் கூறி உங்கள் கணக்கை முடக்க சொல்லுங்கள். மோசடி நடந்த 1-2 மணி நேரம் தான் மிக மிக முக்கியம். இந்த நேரத்திற்கு நீங்கள் புகாரளித்தால் பணத்தை மீட்பதற்கான வாய்ப்பு அதிகம். SHARE.
Similar News
News April 10, 2026
ஜன நாயகனில் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளா? அமீர்

கசித்திருக்கும் ஜன நாயகன் படக் காட்சியிலும் இஸ்லாமியர்கள் தான் தீவிரவாதிகளா என இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தான் தங்களின் அரசியலா, எப்போது தான் மாறும் இந்த மனநிலை என அடுக்கடுக்கான கேள்விகளை தனது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் எழுப்பியுள்ளார். இதன் ஸ்கிரீன் ஷாட் வைரலான நிலையில், ஓர் இயக்குநரே லீக்கான காட்சியை பார்த்தது சரியா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
News April 10, 2026
PM KISAN திட்டத்தின் ₹2,000.. மகிழ்ச்சியான அப்டேட் வந்தது

PM KISAN திட்டத்தின் அடுத்த தவணையை (₹2,000) ஜூன் இறுதி (அ) ஜூலை தொடக்கத்தில் விடுவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க, விவசாயி அடையாள எண் (UNIQUE FARMER ID) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை பெறாதவர்களுக்கு ₹2,000 நிறுத்தப்படலாம். மாநில அரசின் <
News April 10, 2026
தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் நீக்கம்

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக TN மகிளா காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ஹசீனா சையத் நீக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்திக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். தேர்தலில் போட்டியிட சீட் கேட்டதற்கு தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் அதில் அவர் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கார்கேவிடம் முறையிட்டும் பலனில்லை என்றும் கூறியுள்ளார்.


