News September 27, 2025

அந்தியூர் பெருமாள் கோயில்களில் சிறப்பு தரிசனம்!

image

அந்தியூர் தவிட்டுப்பாளையம் சீனிவாச பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் இன்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.மேலும் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அந்தியூர் தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.

Similar News

News January 31, 2026

ஈரோடு: தமிழ் தெரிந்தால் போதும் – வங்கி வேலை!

image

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)
3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7.விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
வேலை தேடும் யாருக்காவது நிச்சயம் இது உதவும் இந்த தகவலை அதிகம் SHARE பண்ணுங்க!

News January 31, 2026

கோபி அருகே சிறுமிக்கு ஆபாச வசவு: ஒருவர் கைது

image

கோபி அருகே அவ்வையார்பாளையத்தைச் சேர்ந்த ராஜசேகர், பள்ளிச் சிறுமியை ஆபாசமாகத் திட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சிறுவலூர் போலீசில் புகாரளித்ததால், ஆத்திரமடைந்த ராஜசேகர் மற்றும் அவரது தம்பி, சிறுமியின் வீட்டிற்கே சென்று அவர்களைத் தாக்கினர். இதில் ரத்தக் காயமடைந்த பெற்றோர் கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தனர்.

News January 31, 2026

சென்னிமலையில் வசமாக சிக்கிய திருடன்!

image

சென்னிமலை வாரச்சந்தை எதிரே நேற்று மாலை முகாசி பிடாரியூரைச் சேர்ந்த மனோகரன் (64) என்பவர் நிறுத்தியிருந்த டிவிஎஸ் வாகனத்தை மர்ம நபர் திருடினார். இதைக் கண்ட மனோகரன், சற்றும் தாமதிக்காமல் மற்றொரு வாகனத்தில் திருடனை விரட்டிச் சென்று முத்தையன் கோவில் பஸ் ஸ்டாப் அருகே மடக்கிப் பிடித்தார். பிடிபட்ட சேலம் எடப்பாடியைச் சேர்ந்த மணிவேல் (41) என்பவரை போலீசில் ஒப்படைத்தார். அவரிடமிருந்து வாகனம் மீட்கப்பட்டது.

error: Content is protected !!