News November 19, 2025

அந்தியூர் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சிந்த கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவர், இருசக்கர வாகனத்தில் அந்தியூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பிரம்மதேசம் பெட்ரோல் பங்க் அருகே, ராஜ்குமார் என்பவர் வாகனம் மோதி பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அந்தியூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News November 19, 2025

ஈரோடு: ரேஷன் கார்டு இருக்கா? இதை பண்ணுங்க

image

ஈரோடு மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். (SHARE பண்ணுங்க)

News November 19, 2025

ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

image

சூரம்பட்டிவலசு, அணைக்கட்டு சாலை, கே.கே.நகா், சென்னிமலை சாலை, ரங்கம்பாளையம், பெரியசடையம்பாளையம் முத்தம்பாளையம், சிப்காட், சின்ன (ம) பெரிய வேட்டுவபாளையம், மோளகவுண்டன்பாளையம், போக்குவரத்து நகா், சோலாா் புதூா், நகராட்சி நகா், மேக்கூா், பெருந்துறை மேற்குப்பகுதி, கோவை சாலை, சின்ன(ம) பெரியமடத்துபாளையம், உட்பட பல ஆகிய பகுதிகளில் நாளை நவ.20 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது

News November 19, 2025

ஈரோடு: கஞ்சா சாக்லெட்டு கடத்தியவர் கைது!

image

ஈரோடு மதுவிலக்கு பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சிவகாமிராணி தலைமையிலான காவல்துறையினர், ஈரோடு ரயில் நிலையத்தில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா சாக்லெட்டுகளை கடத்தி வந்ததாக பீகார் மாநிலத்தை சேர்ந்த மதன்குமார் (23) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா சாக்லெட்டுகளை பறிமுதல் செய்தனர். 

error: Content is protected !!