News August 14, 2024
அந்தியூருக்கு 7 லட்சம் பேர் வருகை

அந்தியூர் புதுப்பாளையம் குருநாதசாமி கோயில் பண்டிகை கடந்த 7ஆம் துவங்கி 10ஆம் தேதியோடு முடிவடைந்தது. இந்த பண்டிகைக்கு 7 லட்சத்து 5 ஆயிரம் பேர் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டுச்சந்தை குதிரைச்சந்தை காணவும் சாமி தரிசனம் செய்யவும் வருகை புரிந்துள்ளனர். 4 இடங்களில் பொழுதுபோக்கு, ராட்டினம், சாகசம், குழந்தைகள் விளையாட்டு என அமைக்கப்பட்டிருந்தது.
Similar News
News October 21, 2025
ஈரோடு: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்ணுகளில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.
News October 21, 2025
ஈரோடு: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். இந்த தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News October 21, 2025
ஈரோடு: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

ஈரோடு மாவட்டத்தில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க!)