News August 19, 2025
அத்தியூர் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகம் முற்றகை போராட்டம்

அத்தியூர் கிராம மக்கள், நேற்று(ஆக.18) காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் திரண்டு முற்றுகையிட்டனர். மனுவில், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கும் தனி சுடுகாடும், பிற சமுகத்தினருக்கு ஒரு பொது சுடுகாடும் உள்ளது. பொது சுடுகாடு பகுதியில், பழங்குடி இருளர் மக்களுக்காக, அரசு சார்பில் இலவச மனை பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுடுகாட்டில் பட்டா வழங்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
Similar News
News August 19, 2025
விழுப்புரம் : B.E படித்தவர்களுக்கு ஏர்போர்ட் வேலை!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 976 ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கட்டக்கலை, சிவில், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் பி.இ, பி.டெக், எம்.சி.ஏ மற்றும் கேட் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். ரூ.40,000 – ரூ.1,40,000 வரை சம்பளம். செப்.27ம் தேதி கடைசிநாள் <
News August 19, 2025
பௌத்தர்கள் புனித யாத்திரைக்கு மானியம் பெற விண்ணப்பம்

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், நாக்பூரில் நடைபெற உள்ள தம்ம சக்கர பரிவர்த்தனை திருவிழாவிற்கு சென்று திரும்பும் 150 பௌத்தர்களுக்கு, தமிழக அரசு தலா ரூ.5000 வரை மானியம் வழங்குகிறது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணம் இன்றி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். வருகின்ற நவ.30 விண்ணப்பிக்க கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 19, 2025
விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(ஆக.18) மாவட்ட சுகாதாரத்துறை மாதாந்திர ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் அரசு மருத்துவமனை கட்டிடங்களின் தரம், உபகரணங்கள், தளவாடப் பொருட்கள் மற்றும் தேவையான மருந்து இருப்புகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. உடன் சுகாதார இயக்குனர் ரமேஷ்பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.