News March 5, 2025
அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை

நாமக்கல், நாச்சிபுதூரை சேர்ந்தவர் ஆர்.பி.சுரேஷ் (வயது 50) அதிமுக பிரமுகரான, இவருக்கும் மலைவேப்பங்குட்டையை சேர்ந்தவர் விவசாயி விமல்குமார் என்பவருக்கும் நிலப்பிரச்சனை இருந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு விமல்குமார் அவரது நண்பருடன் இணைந்து
ஆர்.பி.சுரேஷை கொலை செய்துள்ளார். இந்த வழக்க்கில் விமல்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவு.
Similar News
News September 6, 2025
நாமக்கல்: கொட்டிக் கிடக்கும் சூப்பர் வேலைகள்!

நாமக்கல் மக்களே.., இந்த செப்.., மாதத்தில் மட்டும் நீங்கள் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டிய வேலை வாய்ப்புகள்:
▶️சீறுடை பணியாளர் தேர்வு (https://tnusrb.cr.2025.ucanapply.com/login)
▶️ஊராட்சி துறை வேலை(https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php)
▶️EB துறை வேலை(https://tnpsc.gov.in/)
▶️LIC வேலை(https://licindia.in/)
▶️கிராம வங்கியில் வேலை(https://www.ibps.in/)
News September 6, 2025
நாமக்கல்: ஊக்க தொகையுடன் அர்ச்சகர் பயிற்சி

நாமக்கலில் ஊக்க தொகை ரூ.10,000 பணத்துடன் கூடிய ஓராண்டு கால இலவச அர்ச்சகர் பயிற்சி நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சியானது நரசிம்ம சுவாமி கோயிலில் நடத்தப்படும் வைணவ ஆகமம் குறித்து இருக்கும். இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள், கோயில் செயல் அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
News September 6, 2025
வட்டார வளர்ச்சி அலுவலர் திடீர் மாயம் போலீசார் விசாரணை

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி பிரிவு) பிரபாகரன் நேற்று இரவு பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வழக்கமான பணிகளை முடித்துவிட்டு தனது காரில் நாமக்கல் நோக்கி சென்றவர் வீட்டிற்கு செல்லாத நிலையில் மாயமானார். இதனை அடுத்து பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் யசோதா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.