News August 29, 2024
அதிமுக நிர்வாகி அடித்து கொலையா?

வாழப்பாடி அருகே பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் அதிமுக கிளை செயலாளர் ரவி (50) என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவர் மீது உடம்பில் காயங்கள் இருப்பதாக கூறப்படுவதால், இது கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை செய்து வருகின்றனர். இதுகுறித்து தகவலின் பேரில் போலீசார் விசாரணையில் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News August 23, 2025
BREAKING: ரேபிஸ் நோய்க்கு சேலத்தில் இருவர் பலி!

சேலம்: ஆத்தூர் மந்தைவெளி பகுதியை சேர்ந்த தர்மன் (35). இவருடைய வீட்டில் வளர்த்து வந்த நாய் இவரை கடித்துள்ளது. இதனை அடுத்து முறையாக சிகிச்சை பெற்றுக் கொள்ளாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென்று இன்று உயிரிழந்தார். ரேபீஸ் நோய் தாக்கியதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதே போல் கடந்த சில நாள்களுக்கு முன் ரேபீஸ் நோய் தாக்கி கொங்கணாபுரத்தை சேர்ந்தவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News August 23, 2025
சேலத்தில் நடிகர் கட்டியுள்ள கோயில் எங்கு தெரியுமா?

சேலம் மாவட்டத்தை சேர்ந்த நடிகர் சரவணன் ஓமலூர் வட்டம், வட்டக்காடு என்கிற ஊரில் கோயில் கட்டி இருக்கிறார். வெற்றி விநாயகர் என்று பெயர் கொண்ட அந்த கோயிலின் மகா ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா, வருகிற 27.08.2025 காலை 9.30 முதல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது. அதே நாளில் படப்பிடிப்பு தளம், ஒரு ஸ்டுடியோவையும் தொடங்கவுள்ளர். இதனை இயக்குநர் பாண்டிராஜ் ஆக. 27-ம் தேதி இதை திறந்து வைக்கிறார்.
News August 23, 2025
சேலம்: 1,823 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி!

விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற ஆகஸ்ட் 27- ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் 1,823 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட காவல்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர். இதில் மாநகர் பகுதிகளில் மட்டும் 865 இடங்களில் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.