News March 26, 2025

அதிமுக நிர்வாகிகள் 6 பேர் ராஜினாமா கடிதம் 

image

திசையன்விளையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள பேரூராட்சிக்கு சொந்தமான 6 கடைகளை பகிரங்க ஏலம் விடாமல் அதிமுக திசையன்விளை பேரூராட்சி செயலாளரும், பேரூராட்சி துணைத் தலைவருமான ஜெயக்குமார், திமுக நகர செயலாளர் சேர்ந்து ஏலம் எடுத்துக் கொண்டனர். இதனால் மக்களிடத்தில் பதில் சொல்ல முடியாமல் கிளைச் செயலாளர்கள் 6 பேர் நேற்று ராஜினாமா செய்து எடப்பாடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

Similar News

News November 2, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [நவ.1] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் சுரேஷ் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News November 1, 2025

ஆற்றில் எச்சரிக்கையுடன் இறங்குங்கள் – மாவட்ட நிர்வாகம்

image

நெல்லை மாவட்டம், பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு ஆகிய நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக இன்று (நவ.1) காலை தண்ணீர் திறக்கப்பட்டது. எனவே இனிவரும் காலங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் தாமிரபரணி ஆற்றில் இறங்கவும் நீராடவும் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் டாக்டர் இரா.சுகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

News November 1, 2025

ரூ.3.59 கோடி மதிப்பில் சாகச சுற்றுலா தளம்

image

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணை பகுதியில் சுற்றுலாத்துறை சார்பில் ரூ.3 கோடி 59 லட்சம் மதிப்பிலான சாகச சுற்றுலாத்தலம் மேம்பாடு செய்யப்படுகிறது. இதனை சபாநாயகர் அப்பாவு இன்று அடிக்கல் நாட்டில் பணிகளை தொடங்கி வைத்தார். இங்கு சாகச சுற்றுலா வசதிகள், பல்லுயிர் பூங்கா மற்றும் இதர வசதிகள் அமைக்கப்படும் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.

error: Content is protected !!