News March 29, 2024
அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

தெற்கு பொய்கைநல்லூரில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது. தேர்தல் பணிக்குழு செயலாளர் பால்ராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், ஒன்றிய அவை தலைவர் காசிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் வீடுவீடாக சென்று அதிமுக வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Similar News
News February 10, 2026
நாகை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த திருமருகல் உடையான்தோப்பு தெருவை சேர்ந்த சுகந்தி (45) என்பவர் காணாமல் போன தன் கணவரை கண்டுபிடித்து தர கோரி, அலுவலக வாயிலில் தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட போலீசார், சுகந்தி மீது தண்ணீரை ஊற்றி அவரை மீட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
News February 10, 2026
நாகை: 2 நாட்களுக்கு தண்ணீர் வராது!

கீழ்வேளூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், குடிநீர் குழாய்கள் இணைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக வருகின்ற பிப்.12 மற்றும் பிப்.13 ஆகிய தேதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என்றும், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
News February 10, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (பிப்.09) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


