News March 25, 2026
அதிமுக கூட்டணியில் ‘புத’ இல்லை.. முடிவை அறிவித்தார்

புதிய தமிழகம்(புத) கட்சியுடன் கூட்டணியை இறுதி செய்ய முடியவில்லை என EPS அறிவித்துள்ளார். அவருடன் தாங்கள் தற்போது பேச்சுவார்த்தை நடத்தவில்லை; இனி கூட்டணியில் இணையவும் வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கிருஷ்ணசாமியுடன் தவெக மற்றும் சசிகலா தரப்பு தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய கட்சிகளில் அவர் மட்டுமே கூட்டணி முடிவை அறிவிக்காமல் உள்ளார்.
Similar News
News April 1, 2026
கம்யூனிஸ்ட் ஆட்சி தொடர PM மோடி விருப்பம்: ராகுல் காந்தி

கேரளாவில் இடதுசாரி அணி வெற்றி பெற PM மோடி விரும்புவதாகவும், அதனாலேயே பினராயி விஜயனை அவர் விமர்சிப்பதில்லை என ராகுல் காந்தி சாடியுள்ளார். கம்யூ., – பாஜக இடையேயான ரகசிய கூட்டணியை வீழ்த்தி, கேரளாவில் காங்., தலைமையிலான ஆட்சியை மீண்டும் அமைப்பது உறுதி என்றார். இது தொடர்பாக பேசிய பினராயி, அரசியல் புரிதலின்றி ராகுல் பேசி வருவதாகவும், மக்களுக்கு உண்மை என்ன என்பது தெரியும் என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.
News April 1, 2026
மூன்றே மாதத்தில் கஞ்சா ஒழிக்கப்படும்: EPS

TN-ல் எங்கு பார்த்தாலும் கஞ்சா, போதைப் பொருள் புழக்கமாக உள்ளது என EPS குற்றஞ்சாட்டியுள்ளார். சாக்லேட், திரவ வடிவத்தில் கிடைக்கும் கஞ்சாவை பயன்படுத்தி பள்ளி & கல்லூரி மாணவர்கள் வாழ்க்கை சீரழிந்துவிட்டதாக குறிப்பிட்ட EPS, இதற்கு காரணமான திமுக அரசு ஆட்சியில் தொடர வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பினார். மேலும், அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதங்களில் கஞ்சா முற்றிலும் ஒழிக்கப்படும் என்றார். <<-se>>#TNElection2026<<>>
News April 1, 2026
மேடையில் கண் கலங்கினார் ஆதவ் அர்ஜூனா

சாதியின் காரணமாக தனது அம்மா தற்கொலை செய்துகொண்டதாக ஆதவ் அர்ஜூனா வேதனை தெரிவித்தார். கட்டாயத்தின் பேரில் சாதிய கட்டமைப்புக்குள் திருமணம் செய்து அவர் வாழ்ந்ததாகவும், அதன்பிறகு கடன் சுமை தாங்க முடியாமல் தன் கண் முன்னே உயிரைவிட்டதாகவும் ஆதவ் பிரசார மேடையில் கண் கலங்கினார். பிற்காலத்தில் அம்பேத்கர், பெரியாரை படித்து ஏன் சாதியை ஒழிக்கவேண்டும் என புரிந்துகொண்டு அரசியல் பாதையை தேர்வு செய்ததாக கூறினார்.


