News March 19, 2026

அதிமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டுள்ள ஏ.சி. சண்முகம்

image

தேர்தல் நெருங்கும் நிலையில் தொகுதி பங்கீடு குறித்து புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகத்துடன் EPS பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஏ.சி.சண்முகம் 5 தொகுதிகளை கேட்டுள்ளதாகவும், பாஜகவுடன் பேசிவிட்டு முடிவை தெரிவிப்பதாக EPS கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த முறை NDA கூட்டணியில் அவர் ஒரு தொகுதியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 8, 2026

தர்பூசணியில் இதையும் சாப்பிடலாம்..

image

சம்மரில் பலரும் வீடுகளில் தர்பூசணி வாங்கி சாப்பிடுவோம். அந்த பழம் மட்டுமல்ல; அதன் தோலும் குளிர்ச்சி தரக்கூடியதுதான். அதன் பச்சை பகுதியை மட்டும் நீக்கிவிட்டால் பொரியல், சாலட், ஜூஸ், ஊறுகாய் என பல டிஷ்களை செய்யலாம். வழக்கமான காய்கறி போலவே இதையும் பொரியல் செய்து சாப்பிடலாம். கேரட், வெள்ளரியுடன் சேர்த்து சாலட்டாக சாப்பிடலாம். புதினா, லெமன் சேர்த்து ஜூஸ் அடித்து குடிக்கலாம். SHARE

News April 8, 2026

அதிமுகவுடன் இணைந்தனர்.. திமுக கூட்டணி ஷாக்

image

அரசியல் சதுரங்க விளையாட்டில் கடைசி நேர ஆட்டம் தொடங்கியிருக்கிறது. தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கும் மாற்றுக்கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்க எல்லா அரசியல் கட்சிகளும் தீவிரமாக களமிறங்கியுள்ளன. அந்த வகையில், கொமதேக கொள்கை பரப்புச் செயலாளர் அசோகன், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தனது ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோருடன் EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

News April 8, 2026

எங்களை ஒன்று சேர்த்தது அமித்ஷா தான்: TTV

image

தங்களை ஒன்று சேர்த்தது பாஜகதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று TTV தினகரன் கூறியுள்ளார். அதிமுக & அமமுகவுக்குள் அண்ணன் – தம்பி, மாமன் – மச்சான், பங்காளி சண்டைதான் இருந்தது. அதை தீர்த்து வைத்தவர் அமித்ஷா தான் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மேலும், மீண்டும் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

error: Content is protected !!