News March 25, 2025
அதிக மாத்திரைகளை உட்கொண்டவர் பலி

திருவண்ணாமலை தெள்ளார் பகுதி அஸ்தினாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம் (55). கூலித் தொழிலாளியான இவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் நேற்று (மார்ச்.24) அதிகமான மாத்திரைகளை உண்டு சுருண்டு விழுந்துள்ளார். சேத்பட் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தெள்ளார் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 18, 2025
தி.மலை: உங்க ரேஷன் கார்டடை CHECK பண்ணுங்க…

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
1.AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
2.PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
3.NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
4.NPHH: சில பொருட்கள் மட்டும்.உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <
News September 18, 2025
தி.மலை உழவர் சந்தையின் காய்கறி விலை நிலவரம்

தி.மலை உழவர் சந்தையின் இன்றைய காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, (ஒரு கிலோ) தக்காளி ரூ.20-25, உருளை ரூ.30-40, சின்ன வெங்காயம் ரூ.50-60, பெரிய வெங்காயம் ரூ.20-30, மிளகாய் ரூ.60-80, கத்தரி ரூ.33-42, வெண்டை ரூ.15-20, முருங்கை ரூ.80-100, பீர்க்கங்காய் ரூ.33-42, சுரைக்காய் ரூ.15-20, புடலங்காய் ரூ.15-24, பாகற்காய் ரூ.40-50, முள்ளங்கி ரூ.20-25, பீன்ஸ் ரூ.40-48 என விற்பனை செய்யப்படுகிறது.
News September 18, 2025
தி.மலை: 10th, ITI போதும், அரசு வேலை!

தி.மலை மக்களே நாளையே கடைசி நாள்! தேர்வு இல்லாமல் அரசு வேலை. தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளது.10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். செப்.,19 நாளையே கடைசி நாள் என்பதால் வேலை தேடுபவர்கள் <