News April 4, 2024

அதிகாலையில் தீப்பந்தம் ஏந்தி குவிந்த பக்தர்கள்

image

சிவகிரியில் பழமை வாய்ந்த ஶ்ரீ பொன்காளியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறும். இந்நிலையில் நேற்று பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பெண்கள் மாவிளக்கு எடுத்து பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து நள்ளிரவில் குதிரை துள்ளல் நிகழ்ச்சியும், அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. இன்று அதிகாலை 4 மணியளவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீப்பந்தம் ஏந்தி அம்மனை வழிபட்டனர்.

Similar News

News January 31, 2026

ஈரோடு: Whatsapp-ல் HI சொன்ன போதும் வீடு தேடி வரும்! GAS

image

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 31, 2026

ஈரோடு: தமிழ் தெரிந்தால் போதும் – வங்கி வேலை!

image

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)
3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7.விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
வேலை தேடும் யாருக்காவது நிச்சயம் இது உதவும் இந்த தகவலை அதிகம் SHARE பண்ணுங்க!

News January 31, 2026

கோபி அருகே சிறுமிக்கு ஆபாச வசவு: ஒருவர் கைது

image

கோபி அருகே அவ்வையார்பாளையத்தைச் சேர்ந்த ராஜசேகர், பள்ளிச் சிறுமியை ஆபாசமாகத் திட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சிறுவலூர் போலீசில் புகாரளித்ததால், ஆத்திரமடைந்த ராஜசேகர் மற்றும் அவரது தம்பி, சிறுமியின் வீட்டிற்கே சென்று அவர்களைத் தாக்கினர். இதில் ரத்தக் காயமடைந்த பெற்றோர் கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தனர்.

error: Content is protected !!