News April 5, 2025
அதிகாலையில் சரக்கு வாகனம் கோர விபத்து

கிருஷ்ணகிரி – தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 3:30am சரக்கு வாகனம் (HR38AB2055) தமிழ்நாட்டிற்கு சரக்கு ஏற்றி வந்த நிலையில் சப்பாணிப்பட்டியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே உள்ள ஹோட்டலில் புகுந்தது. இதில் வாகனம் பலத்த சேதம் அடைந்தது. டிரைவர் கிளீனர் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அருகே இருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Similar News
News September 16, 2025
JUST IN: ஓசூரில் ஊசி போட்ட பெண் சுருண்டு விழுந்து பலி

ஓசூர் அரசு மருத்துவமனையில் இன்று கால் வலி சிகிச்சைக்காக ஓசூர் ராம்நகரை சேர்ந்த இம்ரான் என்பவரது மனைவி ரேஷ்மா சென்றுள்ளார். அப்போது மருத்துவர் வலி நிவாரண ஊசி செலுத்தியுள்ளார். ஊசி போட்டபின் சில மணி நேரத்தில் அவர் அரசு மருத்துவமனையில் பாத்ரூமில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரது உறவினர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். ஓசூர் நகர போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 16, 2025
ஓசூர் மக்களுக்கு அடுத்தடுத்த குட் நியூஸ்!

ஓசூர் தொழில் வளர்ச்சிக்கு ஏற்றவாறு, பேரிகை–பாகலூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 2300 ஏக்கரில் அமையவுள்ள இந்த விமான நிலையம் ஓசூர் மக்களுக்கு & தெற்கு பெங்களூரு மக்களுக்கும் ஏற்றுமதி–இறக்குமதி வசதி தரும். சாலை இணைப்புகள் வலுவாக உள்ளதால் வளர்ச்சி வேகமாகும் என அரசு நம்புகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நிலம் கையகப்படுத்தல் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News September 16, 2025
அன்புக் கரங்கள் திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி?

தகுதி உடைய குழந்தைகள் பின்வரும் ஆவணங்களை கொண்டு அன்பு கரங்கள் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்
1. குடும்ப அட்டையின் நகல்
2. குழந்தையின் ஆதார் அட்டையின் நகல்
3. குழந்தையின் வயது சான்று நகல் (பிறப்புச்சான்றிதழ்/கல்வி மாற்றுச் சான்றிதழ்/ மதிப்பெண் சான்றிதழ்)
4. குழந்தையின் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல்
மேலும் விவரங்களுக்கு இந்த <<17726970>>லிங்கை <<>>பார்க்கவும் தேவை உடையவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!