News February 6, 2026

அதிகாரிகளின் அலட்சியத்தால் பலியான இளைஞர்!

image

டெல்லி ஜனக்புரியில் நீர்வாரியத்தால் தோண்டப்பட்ட ஆழமான பள்ளத்தில் இளைஞர் ஒருவர் பைக்குடன் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முறையான எச்சரிக்கை பலகைகள், தடுப்புகள் அமைக்காததே இந்த துயர சம்பவத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. மக்களிடம் வரி வசூலுக்கும் அரசாங்கம் அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கு தவறிவிட்டதாக நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Similar News

News February 18, 2026

US போர்க்கப்பலை ஆயுதம் கடல் மட்டத்திற்கு அனுப்பும்: ஈரான்

image

அமெரிக்கா ஒருபோதும் வெல்ல முடியாது என ஈரானின் உச்ச தலைவர் கொமேனி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வலிமையான ராணுவம் எழுந்து வர முடியாத அளவுக்கு கடுமையாக தாக்கப்படலாம் எனவும் எச்சரித்துள்ளார். ஈரானை சுற்றியுள்ள US போர்க்கப்பலை சுட்டிக்காட்டிய அவர், போர்க்கப்பலை விட ஆபத்தானது, அதை கடல் மட்டத்திற்கு அனுப்பக்கூடிய ஆயுதம் எனவும் கூறியுள்ளார்.

News February 18, 2026

இந்தியா பிரான்ஸ் இடையே 21 ஒப்பந்தங்கள் கையெழுத்து

image

மும்பை வந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை PM மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பாதுகாப்பு, வர்த்தகம், சுகாதாரம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பாக இரு நாடுகள் இடையே 21 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. தொடர்ந்து இந்தியாவின் டாடா நிறுவனமும், பிரான்ஸின் ஏர்பஸ் நிறுவனமும் இணைந்து உருவாகியுள்ள எச்125 ரக ஹெலிகாப்டரை காணொலி வாயிலாக இருவரும் அறிமுகம் செய்து வைத்தனர்.

News February 18, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஆள்வினையுடைமை
▶குறள் எண்: 613
▶குறள்:
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு.
▶பொருள்: நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.

error: Content is protected !!