News April 9, 2025
அதிகளவு புரோட்டீன் பவுடர் சாப்பிட கூடாது

வேகமாக உடற்கட்டழகை கொண்டு வருவதற்காக, அதிகளவு புரோட்டீன் பவுடர் எடுத்துக் கொண்ட இளைஞர் சென்னையில் உயிரிழந்தார். அதிகளவு புரோட்டீன் பவுடரால் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவு, புற்றுநோய், பக்கவாதம் போன்ற நோய்களைத் தூண்டும். பால் மற்றும் சர்க்கரையை செரிமானம் செய்வதில் சிக்கல் உள்ளவர்களுக்கு இரைப்பை மற்றும் குடல் அசௌகரியத்தை அனுபவிக்க நேரிடும். உணவு மூலமா புரதத்தை எடுத்துக்கொள்வது நல்லது.
Similar News
News April 18, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (17.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம்.
News April 17, 2025
சென்னை வாசிகளே! இந்த வாய்ப்புகளை தவறவிட வேண்டாம்

சென்னை ஐகோர்ட்டில் (mhc.tn.gov.in/recruitment/login) 152 காலியிடங்கள் உள்ளன. சம்பளம் ரூ.15,700-ரூ.58,100. சென்னை IIT-யில்(iitm.ac.in) 2 பணியிடங்கள் உள்ளன. சம்பளம் ரூ.14,000-ரூ.40,000. சென்னை கலாஷேத்ராவில்(kalakshetra.in) 2 பணியிடங்கள் உள்ளன. சம்பளம் ரூ.18,000-ரூ.56,900. சென்னை கணித அறிவியல் நிறுவனத்தில்(www.imsc.res.in) 4 பணியிடங்கள் உள்ளன. சம்பளம் ரூ.20,000-ரூ.75,000. *வேலைதேடுவோருக்கு பகிரவும்
News April 17, 2025
மெட்ரோ ரயில் பயணிகள் கவனத்திற்கு

நாளை (ஏப்ரல் 18) புனித வெள்ளி விடுமுறை நாள் ஆகும். இதனை முன்னிட்டு, சென்னை மெட்ரோ ரயில் சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலை 8 முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 முதல் 8 மணி வரை 6 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் எனவும், மற்ற நேரத்தில் 7 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்.