News January 3, 2026
அதிகரிக்கும் ஒயிட் காலர் பயங்கரவாதம்: ராஜ்நாத் சிங்

இந்தியாவில் ‘ஒயிட் காலர்’ பயங்கரவாதம் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயம் என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை சுட்டிக்காட்டி, நன்கு படித்தவர்கள் கூட தேசத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். கல்வி கற்பதன் நோக்கம் என்பது தொழில்முறை வெற்றியை பெறுவதற்கு மட்டுமல்ல, ஒழுக்கம் மற்றும் பண்புகளை வளர்த்துக்கொள்வதை சேர்த்துதான் என்று அவர் குறிப்பிட்டார்.
Similar News
News January 24, 2026
BREAKING: ஓபிஎஸ் – அமைச்சர் சேகர் பாபு திடீர் சந்திப்பு

சபாநாயகர் அறையில் OPS-ஐ அமைச்சர் சேகர் பாபு சந்தித்து 15 நிமிடங்கள் பேசியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் தேர்தலில் தங்களது நிலைப்பாடு என்ன என்பது குறித்து OPS-யிடம் சேகர் பாபு கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. OPS அணியில் இருந்து மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் அடுத்தடுத்து திமுகவில் ஐக்கியமான நிலையில், இந்த சந்திப்பானது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
News January 24, 2026
₹2,000 உதவித்தொகை.. CM ஸ்டாலின் புதிய அறிவிப்பு

முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை நீட்டிக்கப்படுவதாக சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் தற்போது 33 லட்சம் பேர் பயன்பெற்று வரும் நிலையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் விண்ணப்பித்த மேலும் 1.8 லட்சம் பேருக்கு வரும் 4-ம் தேதி முதல் உதவித்தொகை வழங்கும் பணிகள் தொடங்க உள்ளது. இதில், மாற்றுத்திறனாளிகள் மாதம் ₹2,000 வரை உதவித்தொகை பெறுகின்றனர்.
News January 24, 2026
பகுதிநேர டீச்சர்களுக்கு சிறப்பு மதிப்பெண்: CM ஸ்டாலின்

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்போது பகுதிநேர ஆசிரியர்களின் பணிக் காலத்தை அடிப்படையாக கொண்டு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என பேரவையில் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதம் ₹15,000, மே மாதம் கோடை விடுமுறையின்போது ₹10,000 ஊதியம் வழங்கப்படும் என அன்பில் மகேஸ் அறிவித்திருந்தார். ஆனாலும், பணி நிரந்தர வாக்குறுதியை நிறைவேற்ற கோரி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


