News January 3, 2026

அதிகரிக்கும் ஒயிட் காலர் பயங்கரவாதம்: ராஜ்நாத் சிங்

image

இந்தியாவில் ‘ஒயிட் காலர்’ பயங்கரவாதம் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயம் என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை சுட்டிக்காட்டி, நன்கு படித்தவர்கள் கூட தேசத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். கல்வி கற்பதன் நோக்கம் என்பது தொழில்முறை வெற்றியை பெறுவதற்கு மட்டுமல்ல, ஒழுக்கம் மற்றும் பண்புகளை வளர்த்துக்கொள்வதை சேர்த்துதான் என்று அவர் குறிப்பிட்டார்.

Similar News

News January 8, 2026

சென்சார் விவகாரம்.. விஜய் மௌனியாக இருப்பது ஏன்?

image

சென்சார் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஜனநாயகனே (விஜய்) வாய்மூடி மௌனியாக இருப்பதாக CPM பெ.சண்முகம் விமர்சித்துள்ளார். சென்சார் போர்டை குறை சொன்னால் மத்திய அரசை குறை சொன்னதாக ஆகி விடுமோ என்ற அச்சத்தில் படம் வெளியாவது தள்ளி போனாலும் பரவாயில்லை; தன்னை பாதுகாத்துக் கொண்டால் போதும் என எதுவும் சொல்லாமல் இருக்கிறார்; அப்படி இருக்கையில் மற்றவர்கள் எல்லாம் பதறி என்ன ஆகப்போகிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.

News January 8, 2026

BREAKING: மீண்டும் புயல்.. நாளை பேய் மழை வெளுக்கும்

image

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடையும் என IMD தெரிவித்துள்ளது. 15 கிமீ வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் உருவானால் 2026-ன் முதல் புயலாக இது இருக்கும். இதன் தாக்கத்தால் இன்று நள்ளிரவில் மழையும், நாளை கனமழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

News January 8, 2026

பள்ளி மாணவி கர்ப்பம்.. வசமாக சிக்கினார்

image

ஒவ்வொரு நாளும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் அதிர்ச்சியை கொடுக்கின்றன. 2021-ல் சிவகாசியில் 14 வயதான பள்ளி மாணவியை சித்தப்பா முறை கொண்டவரே கர்ப்பமாக்கியுள்ளார். சிறுமிக்கு குழந்தையும் பிறந்துள்ளது. தற்போது, இந்த வழக்கில் குற்றவாளிக்கு 82 ஆண்டுகள் தண்டனை வழங்கி சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. பள்ளிப் பையை சுமக்க வேண்டிய சிறுமி குழந்தையை சுமப்பதை என்ன சொல்வது?

error: Content is protected !!